மழை வந்துருச்சாம்: மாநாடு இல்லையாம்..
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களின் மாநில மாநாடு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் மாநில மாநாடு வருகிற 22ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது.இந் நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 56வது மாநிலமாநாட்டில் வரும் 22ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருந்தார்.
தற்போது சென்னையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், 22ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாடு டிசம்பர் 3ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க பல முக்கியமான அரசு ஊழியர் சங்கங்கள் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்போதிய கூட்டம் வருமா என்பதே சந்தேகமாக இருந்து வந்தது.
சமீபத்தில் சென்னையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கூட்டம் இல்லாமல் காலி நாற்காலிகளைப் பார்க்க நேர்ந்ததால்அமைச்சர்கள் பொன்னையனுக்கும் பாண்டுரங்கனுக்கும் முதல்வர் ஜெயலலிதா டோஸ் விட்டது நினைவிருக்கலாம்.
அதே போல டி.என்.பி.எஸ்.சி. தொடர்பான ஒரு விழாவிலும் முதல்வருக்கு கூட்டம் சேராமல் போனது. கூட்டம் காட்டுவதற்காகடிஜிபி அலுவலக கிளார்க்குகள், டிரைவர்கள், ஊழியர்களை வரிசை கட்டி அமர வைத்திருந்தார்கள்.
இந் நிலையில் தான் அரசு ஊழியர் மாநாடு மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications