காஷ்மீரில் கல்வியமைச்சர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கல்வித்துறை இணையமைச்சர் குலாம் நபி லோன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முதல்வர் முப்தி முகம்மதுவின் பிடிபி கட்சியைச் சேர்ந்த நபி அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் பாதுகாப்புமிகுந்க துல்சிபாக் பகுதியில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் காஷ்மீரில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.ஏகப்பட்ட குண்டுகள், துப்பாக்கிகளுடன் இரு தீவிரவாதிகள் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவான முகம்மத் யூசுப்தாரிகமியின் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி சுட்டனர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிய இரு தீவிரவாதிகளும் அருகில் இருந்த குலாம் நபி லோனின் வீட்டுக்குள் நுழைந்துவெடிகுண்டுகளை வீசினர். கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் குலாம் நபி லோன் கொல்லப்பட்டார்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு ராணுவ வீரர்களும்ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.
இன்னொரு தீவிரவாதி தப்பிவிட்டான். இத் தாக்குதலுக்கு அல்-மன்சூரியான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications