அறிவுத் திருக்கோவில் வேதாந்த்த மகரிஷிக்கு மாரடைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அறிவுத் திருக்கோவிலை நிறுவி நடத்தி வரும் சுவாமி வேதாத்மகரிஷிக்கு மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியால் அறிவுத் திருக்கோவில் என்ற மடத்தை நிறுவி நடத்தி வருகிறார் வேதாத்மகரிஷி. இங்கு தியானம் செய்வதற்கான பிரமாண்டமான மண்டபம் உள்ளது.
95 வயதாகும் வேதாத் மகரிஷி, திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவைகொண்டு வரப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மகரிஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில்இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications