சபரிமலை: புதிய நம்பூதிரியாக சுகுமாரன் தேர்வு
சபரிமலை:
சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மேல் சாந்தியாக எம்.சுகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி முதல் தை மாதம் 5ம் தேதி வரைநடைபெறும் மண்டல பூஜை-மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிவருவார்கள்.அப்போது சுவாமிக்கு பூஜை செய்ய ஆண்டுதோறும் புதிதாக சபரிமலைக்கு மேல் சாந்தி தேர்வு செய்யப்படுவதுவழக்கம்.
கேரள அறநிலையத்துறை அமைச்சர் வேணுகோபால், கோவில் நிாவாகத் தலைவர் ராமன்நாயர் ஆகியோர்முன்னிலையில் நடந்த குலுக்கல் முறை தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய நம்பூதிரியாக சுகுமாரன் தேர்வுசெய்யப்பட்டார்.
53 வயதாகும் சுகுமாரன் நம்பூதிரி திருச்சூர் திருவலம்பாடி கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருகிறார்.இனி அவர் சபரிமலை கோவிலில் 1 ஆண்டு மேல் சாந்தியாக இருப்பார்.
மேலும் சபரிமலையில் மண்டல பூஜை வழக்கமாக டிசம்பர் 26ம் தேதி முடிவடைந்து மீண்டும் ஜனவரி 1ம் தேதிநடை திறப்பது வழக்கம். இநத் ஆண்டு முதல் டிசம்பர் 30ம் தேதி மாலை 5.30 மணிக்கே மகர ஜோதியை முன்னிட்டுநடை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.