முத்துலட்சுமியின் மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று (செவ்வாய்கிழமை) வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிமலைவாழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த சந்தனக் கடத்தல்வீரப்பன் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே தமிழக அதிரடிப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்.அவனது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில் புதைக்கப்பட்டது. வீரப்பன் கொல்லப்பட்டு ஒரு ஆண்டுநிறைவடைகிறது. இதையடுத்து வீரப்பன் சமாதிக்கு அவனது ஆதரவாளர்கள் ஏராளமான பேர் வருவார்கள் எனஎதிர்பார்க்கப்பட்டது.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மலை கிராமப் பெண்களுக்காக ஒரு புதிய இயக்கம் தொடங்க அனுமதியை காவல்துறைகொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக விழா நடத்த இடம் கொடுக்கக் கூடாது என மேட்டூர், கொளத்தூர்பகுதிகளைச் சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர்களை காவல்துறை மிரட்டிவிட்டது.
எனவே வீரப்பன் சமாதிக்கு அருகிலேயே தனது புதிய அமைப்பை முத்துலட்சுமி தொடங்க திட்டமிட்டார். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் இந்த புதிய அமைப்பைத் தொடங்கி வைப்பார் என அறிவிப்பு வெளியானது.
இதற்காக வீரப்பன் சமாதி பகுதியில் விடிய விடிய சுத்தம் செய்யப்பட்டு ஏராளமான நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன.இதை முத்துலட்சுமி மேற்பார்வையிட்டார்.
மூலக்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்தற்கு மாறாக அங்கு பெரும் அமைதி நிலவியது.போலீசார் அதிகஅளவில் குவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ரகசிய போலீசார் சாதாரண உடையில் அதிக அளவில் நடமாடினர்.
சென்னை, கோவை, சேலம், பெங்களூரில் இருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள், டிவி காமிராமேன்களும் வந்திருந்தனர்.
காலை 7.55 மணிக்கு விழா தொடங்குவதற்கு ஆயுத்தமாக வீரப்பன் சமாதி அருகே கட்டபட்டு இருந்த ரேடியாவில் வெற்றி மீதுவெற்றி வந்து நம்ச்ை சேரும் என்ற எம்ஜிஆர் பாடல் முழங்கியது.
இதையடுத்து அந்த பகுதியில் ஆங்காங்கே இருந்தவர்கள் சமாதி நோக்கி வந்தனர். காலை 11.30 மணி அளவில் முத்துலட்சுமிதனது குழந்தைகளுடன் வந்து வீரப்பன் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற புதியஅமைப்பையும் தொடங்கினார்.
வீரப்பன் ஆதரவாளார்கள் போலீஸ் கண்காணிப்புக்கு பயந்து சமாதி பக்கமே வரவில்லை.
2,000 பேருக்கு கூட்டம் சேரும் என்று எதிர்பார்த்து தயார் செய்யப்பட்டிருந்த வெஜிடபிள் பிரியாணியை சாப்பிட ஆள் இல்லை.
இதற்கிடையே சேலம் நகரில் வித்தியாசமாக, இன்று வீரப்பன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வீரப்பன்படத்துடன் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் சேலத்தில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் செல்போன்களில் பரவின.
மேலும் கடந்த ஆண்டில் இதே தினத்தில் இறந்த வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உங்கள் செல்போனை 2 நிமிடம் ஆப்செய்துவிடுங்கள் என்றும் அந்த மெஸேஜில் கோரிக்கை வந்தது.












Click it and Unblock the Notifications