குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கை வேலூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண்களின் கற்பு குறித்து அவதூறாகப் பேசிய குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வேலூர்சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாமக வழக்கறிஞர் லதா செளந்தரராஜன் வேலூர் 4வது குற்றவியல் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அதைத் தள்ளுபடிசெய்தார்.
மதுரை கோர்ட் சம்மன்: இதற்கிடையே, மதுரை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் 28ம் தேதி குஷ்புநேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி நீதிமன்றம் குஷ்புவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த சண்கப்பியா என்பவர் குஷ்பு மீது 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறுவழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிபதி சீதாராமன், நவம்பர் 28ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications