சென்னையில் முகமூடி கொள்ளை: முதிய தம்பதிக்கு கத்திக் குத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை வேளச்சேரியில் வயதான தம்பதியை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் குத்திய முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டிலிருந்தபொருட்களை அள்ளிச் சென்றனர்.

வேளச்சேரி ராமகிரி பகுதியில் வசித்து வருபவர் போத்தன் (வயது 82). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவிஅன்னா (74). இவர்களது மகள் திருமணமாகி கணவருடன் வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் வசித்து வருகிறார்.

ராமகிரி பகுதி வீட்டில் போத்தனும், அன்னாவும் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை கடப்பறையால் உடைத்துக் கொண்டு கொள்ளைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்தது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போத்தன் மற்றும் அன்னாவை கத்தியைக் காட்டி மிரட்டியது முகமூடி அணிந்திருந்த அக் கொள்ளைக்கும்பல். வீட்டில் உள்ள நகைகளை எடுத்துத் தருமாறு மிரட்டியது.

ஆனால் வீட்டில் நகை எதுவும் இல்லை என்று தம்பதியினர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல், போத்தனையும்,அன்னாவையும் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கியது. பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் திருடிச்சென்றனர்.

படுகாயமடைந்த போத்தன், அன்னா இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அன்னாவின் நிலை கவலைக்கிடமாகஇருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் துணிகர கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+