Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருவாய்த்துறை அதிகாரிகளின் மெகா மோசடி: ரூ. 10 கோடி அரசு நிலம் சுவாஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 10 கோடி மதிப்புள்ள ஏரி நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை கலெக்டர் உள்பட 6 முன்னாள்வருவாய்த்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின் நிலங்களை மீட்கும்படி சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபடாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுபிறப்பித்துள்ளது.

இதை தொடர்ந்து சென்னையில் ஆக்கிரமிப்பு நிலங்களை கணக்கெடுத்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டகலெக்டர் சந்திரமோகன் உத்திரவிட்டுள்ளார்.

இதற்காக சென்னை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சகாயம் தலையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களின் ஆய்வில் சென்னை பாடி ரெயில் நிலையம் அருகில் கொளத்தூர் 100 அடி ரோடு அருகாமையில் 2.2ஏக்கர் ஏரி உள்வாயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆறுமுகம் ரெட்டியார், சீனிவாசன் என்ற தொழிலதிபர்கள் இருவரும் 19981ம் ஆண்டு முதல் இந்த நிலத்தைஆக்கிரமித்து, கடந்த 2000ம் ஆண்டு அந்த நிலத்திற்கு செட்டில்மென்ட் பட்டா வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

ஏரி நிலத்துக்கு சட்ட விரோதமாக பட்டா கொடுக்கப்பட்டது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜிடம்புகார் தரப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் இந்த நில ஆக்கிரமிப்பு பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தினார்.

போலீஸ் விசாரணையில், ஆக்கிரமிக்கப்பட்ட 2.2 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ. 10 கோடி என்றும், இந்தநிலத்தில் தற்போது 24 கடைகள், 7 வீடுகள் கட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து நிலத்தை ஆக்கிரமித்த சீனிவாசன், ஆறுமுகம் ரெட்டியார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த நிலத்துக்கு செட்டில்மென்ட் பட்டா கொடுத்ததில் சண்முகம், வீரராகவன், அன்னப்பன், செல்வராஜ்,ஹமீத் நிசார், மற்றும் சண்முகம் ஆகிய 6 முன்னாள் அரசு வருவாய் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செட்டில்மென்ட் பட்டா கொடுப்பதற்கு இந்த அதிகாரிகள் 6 பேருக்கும் தலா ரூ. 25,000 முதல் ரூ. 1 லட்சம் வரைபணம் கைமாறியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து முன்னாள் வருவாய்த்துறை அதிகாரிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சண்முகம் பல்வேறுகுற்றச்சாட்டுகளில் சிக்கி அவ்வப்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் துணைகலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவராவார்.

இந்த மோசடி தவிர மாநிலம் முழுவதுமே வருவாய்த்துறையினரும் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுநிலங்களை சுவாஹா செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+