வருவாய்த்துறை அதிகாரிகளின் மெகா மோசடி: ரூ. 10 கோடி அரசு நிலம் சுவாஹா
சென்னை:
ரூ. 10 கோடி மதிப்புள்ள ஏரி நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை கலெக்டர் உள்பட 6 முன்னாள்வருவாய்த்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின் நிலங்களை மீட்கும்படி சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபடாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுபிறப்பித்துள்ளது.இதை தொடர்ந்து சென்னையில் ஆக்கிரமிப்பு நிலங்களை கணக்கெடுத்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டகலெக்டர் சந்திரமோகன் உத்திரவிட்டுள்ளார்.
இதற்காக சென்னை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சகாயம் தலையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் ஆய்வில் சென்னை பாடி ரெயில் நிலையம் அருகில் கொளத்தூர் 100 அடி ரோடு அருகாமையில் 2.2ஏக்கர் ஏரி உள்வாயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறுமுகம் ரெட்டியார், சீனிவாசன் என்ற தொழிலதிபர்கள் இருவரும் 19981ம் ஆண்டு முதல் இந்த நிலத்தைஆக்கிரமித்து, கடந்த 2000ம் ஆண்டு அந்த நிலத்திற்கு செட்டில்மென்ட் பட்டா வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
ஏரி நிலத்துக்கு சட்ட விரோதமாக பட்டா கொடுக்கப்பட்டது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜிடம்புகார் தரப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் இந்த நில ஆக்கிரமிப்பு பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தினார்.
போலீஸ் விசாரணையில், ஆக்கிரமிக்கப்பட்ட 2.2 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ. 10 கோடி என்றும், இந்தநிலத்தில் தற்போது 24 கடைகள், 7 வீடுகள் கட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து நிலத்தை ஆக்கிரமித்த சீனிவாசன், ஆறுமுகம் ரெட்டியார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த நிலத்துக்கு செட்டில்மென்ட் பட்டா கொடுத்ததில் சண்முகம், வீரராகவன், அன்னப்பன், செல்வராஜ்,ஹமீத் நிசார், மற்றும் சண்முகம் ஆகிய 6 முன்னாள் அரசு வருவாய் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செட்டில்மென்ட் பட்டா கொடுப்பதற்கு இந்த அதிகாரிகள் 6 பேருக்கும் தலா ரூ. 25,000 முதல் ரூ. 1 லட்சம் வரைபணம் கைமாறியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து முன்னாள் வருவாய்த்துறை அதிகாரிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சண்முகம் பல்வேறுகுற்றச்சாட்டுகளில் சிக்கி அவ்வப்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் துணைகலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவராவார்.
இந்த மோசடி தவிர மாநிலம் முழுவதுமே வருவாய்த்துறையினரும் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுநிலங்களை சுவாஹா செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications