போலி: அதிமுகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை:
மொத்த மொத்தமாக போலி வாக்காளர்களை சேர்க்க கட்டுக் கட்டாக மனு அளித்தவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டது. அப்போது புதிய வாக்காளர்களாக சேர்க்கஅதிமுக தரப்பில் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான மனுக்கள் தரப்பட்டன.இந்த மனுக்கள் அனைத்தும் போலி வாக்காளர்களின் பெயர்கள் அடங்கியவை என திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார்கொடுத்தன. இதையடுத்து அதிமுக தரப்பில் ஒட்டுமொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம்தீவிரமாக சோதனையிட்டது.
அப்போது கிட்டத்தட்ட 13 லட்சம் போலி வாக்காளர்களை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் சேர்த்ததுதெரிய வந்தது. இதையடுத்து அந்த அனைத்து மனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இந்த போலியான வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம்கூறியிருந்தது. இதை எதிர்த்து அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரான அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
இந் நிலையில், போலி வாக்காளர்களைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய தேர்தல் ஆணையம்,தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இதுவரை இந்த விஷயத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்த தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திடீரெனவிழித்தெழுந்து உயர் அதிகாரிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் போலியான வாக்காளர்களின் பெயர்களைக்கொடுத்தவர்கள் மீது 3 பிரிவுகளாக வழக்கு தொடரப்படும்.
போலியான முகவரி மற்றும் தவறான முகவரியை அளித்தவர்கள், போலியான கையெழுத்துடன் மனு அளித்தவர்கள் மற்றும் 18வயதுக்குட்பட்டவர்களின் பெயர்களை சேர்த்தவர்கள் என 3 பிரிவுகளாக வழக்கு தொடரப்படும்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்என்றார் நரேஷ் குப்தா.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications