போலி: அதிமுகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை:
மொத்த மொத்தமாக போலி வாக்காளர்களை சேர்க்க கட்டுக் கட்டாக மனு அளித்தவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டது. அப்போது புதிய வாக்காளர்களாக சேர்க்கஅதிமுக தரப்பில் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான மனுக்கள் தரப்பட்டன.இந்த மனுக்கள் அனைத்தும் போலி வாக்காளர்களின் பெயர்கள் அடங்கியவை என திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார்கொடுத்தன. இதையடுத்து அதிமுக தரப்பில் ஒட்டுமொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர்களின் மனுக்களை தேர்தல் ஆணையம்தீவிரமாக சோதனையிட்டது.
அப்போது கிட்டத்தட்ட 13 லட்சம் போலி வாக்காளர்களை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் சேர்த்ததுதெரிய வந்தது. இதையடுத்து அந்த அனைத்து மனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இந்த போலியான வாக்காளர்களை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம்கூறியிருந்தது. இதை எதிர்த்து அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரான அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
இந் நிலையில், போலி வாக்காளர்களைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய தேர்தல் ஆணையம்,தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இதுவரை இந்த விஷயத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்த தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திடீரெனவிழித்தெழுந்து உயர் அதிகாரிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் போலியான வாக்காளர்களின் பெயர்களைக்கொடுத்தவர்கள் மீது 3 பிரிவுகளாக வழக்கு தொடரப்படும்.
போலியான முகவரி மற்றும் தவறான முகவரியை அளித்தவர்கள், போலியான கையெழுத்துடன் மனு அளித்தவர்கள் மற்றும் 18வயதுக்குட்பட்டவர்களின் பெயர்களை சேர்த்தவர்கள் என 3 பிரிவுகளாக வழக்கு தொடரப்படும்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்என்றார் நரேஷ் குப்தா.












Click it and Unblock the Notifications