நவம்பர் 2ல் பர்னாலா ஓய்வு: யார் புதிய கவர்னர்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வருகிற நவம்பர் 2ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதியகவர்னராக யாரை நியமிப்பது என்று மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.
கவர்னர் பர்னாலா ஏற்கனவே 1990ம் ஆண்டில் தமிழக கவர்னராக பணியாற்றினார். அப்போது திமுக அரசுக்குஎதிராக அறிக்கை கொடுக்க அவர் மறுத்ததால் மத்திய அரசாங்கத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பதவியைராஜினாமா செய்தார்.இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 1996ம் ஆண்டு முதல் 1998 வரை மத்தியமந்திரியாக பதவி வகித்தார். அவர் உத்ராஞ்சல் மாநில கவர்னராகவும் பணியாற்றினார்.
கடந்த 2004ம் ஆண்டு நம்பர் மாதம் தமிழக கவர்னராக பொறுப்பேற்றார். இவரின் பதவி காலம் வருகிற நவம்பர்2ம் தேதி முடிவடைவதை தொடர்ந்து, பர்னாலாவுக்கு பதிவி நீடிப்பு கொடுக்க மத்திய அரசு விரும்புவதாகதெரிகிறது.
ஆனால் பர்னாலா கவர்னராக நீடிக்க விரும்பவில்லை. தனது மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புகிறார்.












Click it and Unblock the Notifications