For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரராமன் கொலை வழக்கு: மேலும் 2 பேர் ஜாமீனில் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 2 பேரை சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, சுந்தரேச அய்யர், ரவி சுப்ரமணியம் உள்பட 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதில் ரவி சுப்ரமணியம் அப்ரூவர் ஆகி விட்டார். மற்ற 24 பேர் மீதும் குற்றப் பத்திடீஞூக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தற்போதுசெங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இவ்வழக்கில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதீஷ், ஆறுமுகம் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சர்தார் ஜக்கிரியா உசேன் இருவரையும்ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இன்னொரு குற்றவாளியான தில் பாண்டியன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி உசேன் நிராகரித்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X