மாமூல்: முன்னாள் ராணுவ வீரரை சுட்ட காக்கி
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே முன்னாள் ராணுவ வீரருடன் ஏற்பட்ட தகராறில் அவரை போலீஸ்காரர் துப்பாக்கியால்சுட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் சேவா மகளிர் மன்ற பால் உற்பத்தி சங்கத்தின் உள்ளது.இந்தச் சங்கத்தில் வரதராஜன் (வயது 45) என்பவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர்ஆவார்.
இவர் வழக்கம் போல் அதிகாலை ஆட்டோவில் சென்று சுற்றுவட்டாரத்தில் பால் சேகரித்துக் கொண்டு மாசார்பட்டிபோலீஸ் நிலையம் வழியாக சென்ற போது அங்கு காவலுக்கு நின்ற பாரா போலீஸ்காரர் (வயது 38) என்பவர்ஆட்டோவை வழி மறித்தார்.
ஆட்டோவில் ரியர் வியூ கண்ணாடி இல்லை என்று கூறி வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்.
வண்டியை ரிலீஸ் செய்ய அந்த போலீஸ்காரர் மாமூல் கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து வரதராஜனுக்கும்போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரடைந்த போலீஸ்காரர் தனது தூப்பாக்கியால்வரதராஜனை நோக்கி சுட்டார். இதில் அவரது வயிற்றில் குண்டு பாய்ந்து குடல் சரிந்தது.
உடனே அவரை மற்ற போலீசார்கள் ஜீப்பில் ஏற்றி பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுடப்பட்டவரதராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அவரிடம் தூத்துக்குடி மாஜிஸ்ரேட்டு வாக்குமூலம் வாங்கினார்.
மேலும் தூத்துக்குடி எஸ்.பி மகேஷ்குமார் அகர்வால் சம்பவயிடத்திற்கு விரைந்து பார்வையிட்டார். பிறகு அவரதுஉத்தரவின் பேரில் துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் சுயம்புலிங்கம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் சுயம்புலிங்கம் பெரும் குடிகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. மாமூலுக்காக வண்டிகளை நிறுத்தி காசுவாங்குவது இவரது ரெகுலர் டூட்டிகளில் ஒன்று.
சம்பவம் நடந்தபோது போதையில் தான் இவர் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications