ஜெ ஆட்சி போனால் தான் தமிழர் மானம் மிஞ்சும்: ஆர்எம்வி
திருச்சி:
ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றினால் தான் தமிழர்களின் மானம், மரியாதை மிஞ்சும் என எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் கழகத்தின் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் வீரப்பன் பேசியதாவது:வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழர்களின் மானம் மீட்கப்படும். 1966ல் இருந்து எந்த சக்தி (ஜெயலலிதா) உள்ளே வரக் கூடாது என்று நினைத்தேனோ அந்த சக்தி உள்ளே வந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது.
எம்ஜிஆர் என்ற மகத்தான சக்தி திமுகவுக்குத் தான் சொந்தம். எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டே ஒரே தலைவர் கருணாநிதி தான். அதே போல எம்ஜிஆர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரும் ஆற்றல் கருணாநிதக்கே உண்டு.
சேது சமுத்திரத் திட்டத்தையே எதிர்க்கும் ஜெயலலிதா இந்த மாநில முதல்வராக இருப்பதை விட பெரிய கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது. தீய சக்தியிடம் தமிழகம் மாட்டிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றினால் தான் தமிழர்களின் மானம், மரியாதை மிஞ்சும் என்றார்.