தாகி தம்பி வீட்டில் டமார்: காவலர் காயம்
சிவகங்கை:
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் வீட்டில் திடீரென்று துப்பாக்கி வெடித்தது. இதில்ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கொம்புகாரனேந்தல் கிராமத்தில் தா. கிருஷ்ணனின் அந்த வீட்டில்அவரது தம்பி ராமையா குடியிருந்து வருகிறார்.ராமையா அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். மேலும் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் முக்கியசாட்சியாகவும் உள்ளார். இதனால் ராமையாவுக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்தன. எனவே அவர்வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் இருளப்பன், இளையராஜா, ராமசாமி, பாலமுருகன், செந்தில்குமார் ஆகிய போலீஸ்காரர்கள்ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் போலீஸ் பாலமுருகனின் துப்பாக்கியை, இருளப்பன் வாங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது துப்பாக்கி விசையின் மீது அவரது கை தவறுதலாக பட்டு குண்டு வெடித்ததில் அவரது முழங்காலில்படுகாயம் ஏற்பட்டது.
உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவுநேரத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications