சூறாவளி: அமெரிக்காவை மிரட்டும் "வில்மா"
மியாமி:
அமெரிக்காவை வில்மா என்ற இன்னொரு புயல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கும் அபாயம்ஏற்பட்டடுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மாதம் சூறாவளி புயல் காற்று வீசியது. முதலில் காத்ரீனா என்ற புயலும் பின்னர் ரீட்டாஎன்ற புயலும் தாக்கின.அடுத்தடுத்து தாக்கிய புயலால் நியூ ஓர்லியன்ஸ், அலபாமா, லூசியானா, மிசிசிபி, புளோரிடா ஆகியமாகாணங்கள் சின்னாபின்மாகி விட்டது.
அதில் ஆயிரக்கணக்கானர்கள் உயிரிழந்தனர். இந் நிலையில் அமெரிக்காவை இன்னொரு புயல் தாக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
கரிபியன் கடல் பகுதியில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு வில்மா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் மெக்சிகோ வளைகுடா பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. மேற்கு நோக்கி நகரும் இந்த புயல்கியூபா, நிக்கராகுவா, ஹொண்டுரஸ், மற்றும் அமெரிக்காவில் மெக்சிகோ, புளோரிடா கடற்கரை பகுதிகளைகடுமையாக தாக்கும் என்றும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வில்மா புயல் கேமான் தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications