வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைதாகிறார்?
மேட்டூர்:
அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இயக்கம் தொடங்கியுள்ள வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியைக் கைது செய்யதமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீரப்பன் கூட்டாளிகளுடன் தொடர்பு, தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அதன் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்படலாம் என்று தெரிகிறது.வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாளான நேற்று, மூலக்காட்டில் உள்ள வீரப்பனின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய முத்துலட்சுமி மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இந்தப் புதிய அமைப்பைத் தொடங்கி வைத்தார். வீரப்பன் நினைவு தினத்தையொட்டியார் யார் சமாதிக்கு வருகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக உளவுப் போலீசார் பெருமளவில் அப் பகுதியில் நடமாடினர்.
அங்கு வந்தவர்களை படம் எடுத்ததோடு, அவர்களது விவரங்களையும் சேகரித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்த் தீவிரவாதிகள் வந்ததாகக்கூறியும், அவர்களோடு முத்துலட்சுமிக்குத் தொடர்பிருப்பதாகக் கூறியும் விரைவில் அவர் உள்ளே தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வேலை சேலம் போலீசார் வசம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே முத்துலட்சுமிக்கு எதிராக தடா தங்கவேலு என்பவர் களம் இறங்கியுள்ளார். தடா தங்கவேலு கொளத்தூரைச் சேர்ந்தவர்.வீரப்பனுக்கு உதவியதாக கூறி இவரை கர்நாடக போலீஸார் கைது செய்து 2 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் நிபந்தனைஜாமீனில் விடுதலையானார்.
விடுதலைக்குப் பின்னர் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் அமைப்பை நடத்திவருகிறார் தங்கவேலு.
இந்த அமைப்பின் சார்பில் கொளத்தூரில் வீரப்பன் நினைவு நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அனைவரும் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்கள்.
இக் கூட்டத்தில் முத்துலட்சமியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துலட்சுமியின் அமைப்பு அதிரடிப்படையினரால்பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்குப் பாதகமாக அமையும். எனவே முத்துலட்சுமியின் இயக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும்.
முத்துலட்சுமியைக் கைது செய்ய வேண்டும். அவரிடம் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்குவழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த தடா தங்கவேலுவை உளவுப் பிரிவினர் தான் இயக்குவதாக முத்துலட்சுமி தரப்பு சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications