கேரளா: தமிழக பஸ்சுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கொச்சி:
கொச்சியிலிருந்து கிளம்பிய தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்சில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்ததகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சி பஸ் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு, தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று கிளம்பியது.பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், பஸ் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தமிழகபேருந்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட பேருந்து எர்ணாகுளம் வந்தபோது அங்குபேருந்து நிறுத்தப்பட்டு அனைத்துப் பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர்.
மெட்டல் டிடெக்டர் மூலம் பேருந்து முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. பயணிகளின் உடமைகளும்சோதனைக்குள்ளாக்கப்பட்டன. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
கடந்த மாதம் கொச்சி அருகே ஒரு தமிழக அரசுப் பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டது. நினைவுகூறத்தக்கது. அதே போல மேலும்இரு தமிழக பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்களும் நடந்தன.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைப்பட்டுள்ள, அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள் தான் இந்தச்செயல்களைச் செய்தது தெரியவந்தது.
இந் நிலையில் தற்போதைய வெடிகுண்டு மிரட்டலை, போலீஸார் சாதாரண புரளியாக எடுத்துக் கொள்ளவில்லை.
சம்பந்தப்பட்ட பேருந்துக்கு தமிழக எல்லை வரை கேரள போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
அதேபோல கேரளாவுக்குள் இயங்கும் தமிழகப் பேருந்துகள் அனைத்துக்கும் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் முக்கிய பேருந்து நிலையங்களில், போலீஸார் கண்காணிப்பையும் அதிகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications