அய்யரின் அட்வைஸ்: பெண்கள் கொதிப்பு
சென்னை:
பெண்கள் சேலை எடுப்பது, சினிமாவுக்குப் போவதைக் குறைத்துக் கொண்டால், கேஸ் விலை உயர்வை சமாளிக்க முடியும் என்றுபேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யரைக் கண்டித்து சென்னையில் பெண்கள் அமைப்பினர் உருவபொம்மை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, கேஸ் விலை உயர்வை சமாளிக்கமுடியவில்லை என்று பெண்கள் கூறக் கூடாது.ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களும், சினிமாவுக்குப் போவதையும், சேலைகள் எடுப்பதையும் குறைத்துக் கொண்டால்தாராளமாக கேஸ் விலை உயர்வை சமாளிக்க முடியும் என்று மண்டைக்கனத்துடன் கூறியிருந்தார்.
அய்யரின் இந்தப் பேச்சு பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பெண்கள்அமைப்பு ஒன்று இன்று காலை மணிசங்கர அய்யரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்துப் போராட்டம் நடத்தியது.
போராட்டத்தில் பங்கேற்ற வசந்தா என்ற பெண் கூறுகையில், நாங்கள் தினசரி சினிமாவுக்குப் போவதில்லை, தினமும் புடவைஎடுப்பதில்லை. எப்போதாவதுதான் சினிமாவுக்குப் போகிறோம், விசேஷம் என்றால்தான் புடவை எடுக்கிறோம்.
நாங்கள் சாதாரண புடவையைத்தான், அதுவும் பேரம் பேசித்தான் வாங்குகிறோம். மணிசங்கர் அய்யர் போன்ற பெரியமனிதர்களின் வீடுகளில் சாதாரணமாகவே பட்டுப் புடவைதான் எடுப்பார்கள்.
நாங்கள் அதிகம் செலவு செய்வதில்லை, அய்யர் போன்ற பெரிய மனிதர்களுக்குத் தான் ரொம்ப செலவாகும்.
சாதாரண சேலை எடுப்பதையே அதிக முறை யோசித்து எடுக்கும் எங்களைப் பார்த்து புடவை எடுப்பதை நிறுத்து, சினிமாபார்ப்பதை நிறுத்து என்று மணிசங்கர அய்யர் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார் காட்டமாக.
பெண்களைப் பற்றித் தப்பாகக் கூறப் போய் குஷ்பு சமீபத்தில் படாதபாடு பட்டார். இப்போது தமிழக பெண்களைஉசுப்பேத்தியிருக்கிறார் அய்யர்.
இது தேவையா மிஸ்டர் மணி?












Click it and Unblock the Notifications