எஸ்ஆர்பி வீட்டு கொள்ளை: காங் போராட்டத்திற்கு போலீஸ் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணிம் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக உரிய விசாரணைநடத்தாததைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.

எஸ்.ஆர்.பியின் சென்னை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது. இது அதிமுக தலைமையின் ஆசியுடன்போலீசாரின் முழு உதவியுடன் நடந்த திருட்டு என்றும், தனது வீட்டில் இருந்த ஆவணங்களை எடுக்கவே திருடர்கள்வந்ததாகவும் எஸ்.ஆர்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் கொள்ளை தொடர்பாக போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி காங்கிரஸ்சார்பில் இன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. சென்னை நகரில் போராட்டம்,ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்த வேண்டுமானால், 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோர வேண்டும்.

ஆனால் காங்கிரஸார் நடத்தவுள்ள போராட்டத்திற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.எனவே அனுமதி வழங்க முடியாது என்று காவல்துறை மறுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்த வேண்டும் என எஸ்.ஆர்.பி, வட சென்னை மாவட்டத் தலைவர் ராயபுரம்மனோ, மத்திய சென்னை மாவட்ட தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் வாசனிடம் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வாசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் வரவில்லை. அவர்இளங்கோவன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இளங்கோவனுக்கும் எஸ்ஆர்பிக்கும் ஆகாது என்பது உங்களுக்குத்தெரியுமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+