மூஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது: பாஜக
சென்னை:
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக பாஜக தலைவர்ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.
சமீபத்தில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.இதையடுத்து ஜெயலலிதாவும் தனது முந்தைய நிலையில் இருந்து அந்தர் பல்டி அடித்து இட ஒதுக்கீடு குறித்துபரிசீலிப்போம் என்று கூறியுள்ளார்.இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,
தேர்தல் வெற்றிக்காக தொலைநோக்கு பார்வையின்றி, முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வோம் எனதிமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.
இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்காக கொண்டு வரப்பட்டது. அதில் மதத்தின் பெயரால்இட ஒதுக்கீடு என்பது பிற்ஷ்ரபடுத்தப்பட்ட மக்களின் உரிமையைப் பறிப்பது போலாகும்.
மதரீதியில் இட ஒதுக்கீடு என்பது பிரிவினைக்கு வழிவகுக்கும், இந்து, முஸ்லீல் இடையே நிரந்தர பிளவைஏற்படுத்தும். உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் முஸ்லீம்கள் சுதந்திரமாக உள்ளனர்.
எனவே முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தர தமிழக அரசு ஒத்துக் கொள்ளக் கூடாது.
சமையல் கியாஸ் விலை உயர்வை சமாளிக்க பெண்கள் புடவை வாங்குவதை நிறுத்த வேண்டும் எனபெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் சொல்லும் அளவுக்கு மத்திய அரசின் நிலை உள்ளது.
15 மாத ஆட்சியில் பல முறை பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய இவர்கள், 5 வருடம் ஆட்சியில்இருந்தால் பெண்கள் புடவையே கட்ட வேண்டாம் என்று சொல்வார்கள்.
வரும் சட்ட சபை தேர்தலில் பாஜக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். அதற்கான ஆய்வுப்பணிகள்நடந்து வருகின்றன. வருகிற நவம்பர் 19ம் தேதி கட்சியின் மகளிர் அணி மாநாடு நடக்கவுள்ளது. மேலும்அம்பேத்கார் நினைவு தினத்தை வீர வணக்க நாளாக கொண்டாடவுள்ளோம்.
அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி சேலத்தில் மண்டல மாநாடு நடக்கவுள்ளது. தமிழகத்தில் யாரும் ஒதுக்கமுடியாதஅரசியல் சக்தியாக பாஜக மாறும். எனவே, கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்தக் கட்சியினருடனும் நாங்கள்பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
குடிதண்ணீர், நீர் ஆதாரங்களை காப்பாற்றுல் ஆகியவற்றை முன்னிறுத்தி வரும் சட்டசபை தேர்தலில் பிரச்சாரம்செய்வோம் என்றார் ராதா.