ஜெயலட்சுமியும், சத்திய சோதனையும்!
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகஜால ஜெயலட்சுமி, இப்போது மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனைபுத்தகத்தைப் படித்து வருகிறாராம்.
திண்டுக்கல் ஆயுதப்படை டி.எஸ்.பியாக இருந்த ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில்ராஜசேகரும், ஜெயலட்சுமியும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இருவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜசேகரால்தான் இந்த நிலைக்கு ஆளோனோம் என்று சிறையில் புலம்பி வரும் ஜெயலட்சுமி,தன்னை சந்திக்க வரும் வழக்கறிஞர்களிடம் தன்னை சீக்கிரம் ஜாமீனில் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு கெஞ்சி வருகிறாராம்.
இது மட்டுமல்லாது, சிறையில் பொழுதைக் கழிப்பது மிகவும் சிரமமாக இருப்பதால், தனது வீட்டில் இருந்த சத்திய சோதனைபுத்தகத்தை வழக்கறிஞர் மூலம் எடுத்து வரச் செய்து தினமும் அதைப் படித்து வருகிறாராம்.
ஜெயலட்சுமியை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரும் மனு அடுத்த வாரம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜசேகரனின் மனு தள்ளுபடி
இதற்கிடையே ஜாமீன் கோரி ராஜசேகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஏற்கனவே அவரது மனுவை திண்டுக்கல் செசன்ஸ் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது நினைவுகூறத்தக்கது.
அதே நேரத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செசன்சு நீதிமன்றத்தில் ராஜசேகர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுள்ளது.












Click it and Unblock the Notifications