குமுதம் பத்திரிக்கை மீது பாமக வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் மீது பாமக தலைவர் ஜி.கே.மணி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் சுனாமி நிவாரண நிதிக்காக, சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் வழங்கிய நிதியில் ரூ. 63 கோடியை பாமக நிறுவனரின் மகனும், மத்திய சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்முடக்கி வைத்து, சுருட்டி விட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இது அவதூறான, பொய் செய்தி என பாமக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், குமுதம் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து பாமக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டனர்.

இந் நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு அஜதூறு வழக்குத்தொடர்ந்துள்ளார்.

அதில், உண்மைக்கு மாறாக அமைச்சர் அன்புமணியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான செய்தியைவெளியிட்ட குமுதம் ப்போர்ட்டர் இதழின் நிறுவனர், ஆசிரியர், பதிப்பாளர், நிருபர், வெளியீட்டாளர் உள்ளிட்ட 10 பேர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

7 பிரிவுகளின் கீழ் குமுதம் குழுவினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி மகராஜன்,வரும் நவம்பர் 11ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் 10 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும்உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+