For Daily Alerts
Just In
தமிழகத்தில் நக்சலைட்டுகள் இல்லை: சி.ஆர்.பி.எப்.
கோவை :
தென்னிந்தியாவில் ஆந்திரம், கர்நாடகத்தில்தான் அதிக அளவில் நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர். தமிழகத்தில்சுத்தமாக நக்சலைட்டுகளே இல்லை என்று மத்திய ரிசர்வ் போலீஸ் ஐ.ஜியான கே.டி.டி. சிங் கூறியுள்ளார்.
கோவை வந்த சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிக்சலைட்தீவிரவாதிகளின் அட்டகாசம் பெருமளவில் உள்ளது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆந்திராதான்நக்சலைட்டுகளின் மையமாக திகழ்கிறது.கர்நநிாடகத்தின் எல்லைப் பகுதிகளில் நக்சலைட்டுகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றைக்கட்டுப்படுத்த அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை நக்சலைட்டுகள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. இங்கு நக்சலைட் இயக்கங்களேஇல்லை எனலாம்.
கேரளாவில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் அதிகரித்து வருகின்றனர். இருப்பினும் வன்முறைச்சம்பவங்களில் இதுவரை அவர்கள் ஈடுபடாமல் உள்ளனர் என்றார் சிங்.
Comments
Story first published: Friday, October 21, 2005, 5:30 [IST]