தமிழக சுய உதவி குழு பெண்களுடன் ராகுல் ஆலோசனை
சென்னை:
சென்னையில் நடக்க உள்ள காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
அமேதி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி நேற்றுதிருச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினரைச் சந்தித்துப் பேசினார்.அதே போன்ற குழுக்களை தனது தொகுதியிலும் அமைத்து பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிகாண அவர்திட்டமிட்டுள்ளார்.
இதைத் தவிர மேலும் பல நிகழச்சிகளில் கலந்து கொண்ட ராகுல் பின்னர் மதுரை சென்றார். அங்கு அரவிந்த் கண்மருத்துவமனை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய ராகுல், இந்த மருத்துவமனையின் கிளையை தனதுதொகுதியான அமேதியில் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழக வர்த்தக காங்கிரஸ் செயலாளர் வசந்தகுமார், சென்னைதேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்குமாறுகேட்டுக் கொண்டார்.
டெல்லியில் ஏற்கனவே ராகுல் காந்தியை சந்தித்து இது தொடர்பாக வசந்த் குமார் அழைப்பு விடுத்ததுகுறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்பதாக ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி சென்னையில் இருந்கு திருச்சி சென்ற விமானத்திலேயே வசந்தகுமாரும் சென்றார்.அப்போது தமிழக காங்கிரசின் கோஷ்டிப் பூசல் குறித்து தன்னால் முடிந்த அளவுக்கு ராகுலிடம் வசந்தகுமார்போட்டுக் கொடுத்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications