ரூ. 400 கோடிக்கு மில் வாங்கிய மாஜி சபாநாயகர், சிவசேனை தலைவர்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் மூடப்பட்ட ஜவுளி ஆலையை ரூ. 400 கோடி கொடுத்து சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் சகோதரி மகன் ராஜ்தாக்கரேவும், அம் மாநில முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற மாஜி சபாநாயகர் மனோகர் ஜோஷியும் வாங்கியுள்ளனர்.

இதை வாங்க இவர்களுக்கு நிதியுதவி செய்த ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைநடத்தியுள்ளனர்.

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே ஏகத்துக்கும் சொத்து குவித்திருப்பதாக சமீபத்தில் அக் கட்சியில் இருந்து விலகிய மூத்ததலைவரான ரானே குற்றம் சாட்டியுள்ளார்.

இந் நிலையில் மூடப்பட்ட மும்பை கோகினூர் ஜவுளி ஆலையை அதன் நிலத்துடன் சேர்த்து ராஜ் தாக்கரேவும் ஜோஷியும் சேர்ந்துரூ. 400 கோடிக்கு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தியபோது அவர்களுக்கு பொதுத்துறை நிதிநிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் இந்தக் கடனை வழங்கியுள்ளது தெரிய வந்தது.

எந்த அடிப்படையில் இவர்களுக்கு இவ்வளவு பெரிய நிதி கடனாக வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. வெளிநாட்டில்இருந்து முறைகேடாக இந்தியாவுக்குத் திருப்பிவிடப்பட்ட பணமாக இது இருக்கலாம் என்றும் வருமான வரித்துறைசந்தேகிக்கிறது.

இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்ட் நடத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் மனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+