For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறள் வழி வாழ்வோருக்கு ஸ்ரீராம் நிறுவனத்தின் அறம் விருது!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருக்குறளில் காட்டப்பட்டுள்ள நெறிகளின்படி வாழ்வோருக்கு ஸ்ரீராம் குழுமம் வழங்கி வரும் அறம் விருதோடு இனிமேல் ரூ. 1லட்சம் பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் வழி நடப்போருக்கு கடந்த இரண்ட ஆண்டுகளாக அறம் விருதினை ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வழங்கி வருகிறது.தற்போது 3வது ஆண்டாக இந்த விருதை வழங்கவுள்ளனர்.

குறள் காட்டும் வழியில் கலை, இலக்கியம், பண்பாட்டு, வாழ்வியல் நெறிகளைத் தேர்ந்தெடுத்து, ஏதேனும் ஒரு துறையில்அச்சிந்தனையுடன் வாழ்வோருக்கு இந்த அறம் விருது வழங்கப்படும்.

இவ்விருது பெறத் தகுதியுடையோர் அவர்களாக விண்ணப்பிக்கக் கூடாது. அவர்களது சிறப்புகளை விளக்கி சமுதாயத்தில் நன்குஅறிமுகமான இருவர் பரிந்துரைக்க வேண்டும்.

முழு வெள்ளைத் தாளில் 2 பக்கங்களுக்கு மிகாமல் பரிந்துரைத்து அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தை ஸ்ரீராம் இலக்கியக்கழகம், ஐந்தாவது தளம், 149, கி.ம்ஸ் சாலை, சென்னை - 600 006 என்ற கவக்கு நிவம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 50 வயதுக்கு மேற்பட்டவராக, இந்தியராக, இந்தியாவில் வாழ்பவராக இருக்க வேண்டும் என்பதுமுக்கியம்.

விருது பெறத் தகுதியுடையவர்களை முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்துஅறிவிக்கும். இந்த ஆண்டு முதல் அறம் விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசுப் பணமும் வழங்கப்படும் என ஸ்ரீராம் இலக்கியக் கழகம்அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X