கருணாநிதியை கண்டித்து மாணவர்கள் போஸ்டர்!
சென்னை:
திமுக தலைவர் கருணாநதியை கடுமையாக கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் சென்னை நகரின்பல்வேறு கல்லூரிகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் சுய நல எண்ணம் கொண்டிருக்கிறார்கள், லட்சியம் இன்றிஇருக்கிறார்கள், பணம், பதவிக்காக அலைகிறார்கள் என சமீபத்தில் முரசொலியில் எழுதிய ஒரு கட்டுரையில்கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.இதற்கு கல்லூரி மாணவர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கருணாநிதியைக் கண்டித்து அனைத்துக் கல்லூரிமாணவர் பேரவை அமைப்பாளர் பாலசுப்ரமணியன் அறிக்கையும் வெளியிட்டார்.
இந் நிலையில் இன்று சென்னை நகரின் முக்கியக் கல்லூரிகளின் சுவர்களில் கருணாநிதியை கடுமையாககண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
மகனை முதல்வராக்குவதற்கு மதம் பிடித்து அலையும் கருணாநிதியே என்று விளித்து சுவரொட்டி வாசகங்கள்கடுமையாக இருந்தன. அவற்றை சில கல்லூரிகளின் சுவர்களிலிருந்து போலீஸார் அகற்றினர்.
ஆனால் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விட்டு விட்டனர்.
இதற்கிடையே கருணாநிதி மாணவர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டத்தில்குதிக்க நேரிடும் என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.