For Quick Alerts
For Daily Alerts
Just In
வேன்-லாரி மோதல்: 3 ஆசிரியைகள் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 ஆசிரியைகள் பலியாயினர். மேலும்19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.வேலூர் செயின்ட் மேரீஸ் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்-ஆசிரியைகள் 25 பேர் ஒகேனக்கலுக்கு சுற்றுலாசென்றனர். அவர்கள் சென்ற வேன் தர்மபுரி அருகே காரிமங்கலத்தை அடுத்துள்ள பைசஹள்ளி என்ற இடத்தில்எதிரே வந்த லாரி மீது மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த ஆசிரியைகள் ரெஜினா, எழிலரசி, அருள்செல்வி ஆகியோர் சம்பவயிடத்திலேயேஉடல் நசுங்கி செத்தனர்.
மேலும் ஆசிரிய-ஆசிரியைகள் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள ரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Saturday, October 22, 2005, 5:30 [IST]