For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை எல்.ஐ.சி அலுவலகத்தில் திடீர் தீ

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:

பாளை எல்.ஐ.சி அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

பாளை வ.உ.சி மைதானம் அருகிலுள்ள தலைமை எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஒரு அறையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, அந்த அறை முழுவதும் தீ பரவியது.

இதில் 11 கம்யூட்டர்கள் எரிந்து நாசமாயின. மேலும் முக்கிய ஆவணங்களும் தீக்கிரையாயினதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இல்லையென்றால் பல கோடி சேதத்தை எல்.ஐ.சி நிறுவனம் சந்தித்து இருக்கும்.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக பாளை போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X