ஜாமீன் கோரும் கராத்தே: புகாரை மறுக்கும் பெண்
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனைக் கைது செய்ய போலீஸார் தீவிரமாக இறங்கியிருப்பதால் முதல்முறையாக முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவரை வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டியதாக கராத்தே மீது தேனாம்பேட்டைகாவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் அவரை முதலில் கைது செய்ய போலீசார்திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னர் அவர் மீது மேலும் பல வழக்குகள் அடுக்கப்படும் என்று தெரிகிறது.இந் நிலையில் கராத்தே தியாகராஜன் சார்பில் அவரது வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் (சங்கரராமன் கொலை வழக்கில் இவர்தான்ஜெயேந்திரருக்காக ஆஜராகி வருகிறார்) முன் ஜாமீன் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தி.நகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவரைவீட்டைக் காலி செய்யும்படி நான் மிரட்டியதாக பொய்யான வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கொலை மிரட்டல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. இது பொய் வழக்காகும். இதில் என்னைபோலீஸார் கைது செய்யக் கூடும் என நினைக்கிறேண். இதனால் எனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்கராத்தே.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
புகாரே தரவில்லை: சகுந்தலா
இதற்கிடையே கராத்தே மீது நான் எந்தப் புகாரும் போலீசாரிடம் தரவில்லை என சகுந்தலா மறுத்துள்ளார்.
தி.நகர் விஜயராகவன் தெருவில் வசிக்கும் அவர் கூறுகையில், என் வீட்டை விற்றது தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன்ஏற்பட்ட பிரச்சனையில் கராத்தே தியாகராஜன் எனக்கு உதவி தான் செய்தார். அவர் உதவியால் தான் போலீசாரே அந்தவிவகாரத்தில் தலையிட்டனர். எனக்கு உதவி செய்த தியாகராஜன் மீது நான் எந்தப் புகாரும் தரவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை கராத்தேவின் முன் ஜாமீன் மனுவுக்கு போலீசார் பதில் மனுதாக்கல் செய்தால் தான் இந்த விவகாரத்தில் தெளிவு ஏற்படும்.
அதே நேரத்தில் கராத்தே மீது எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் போலீசார் டெல்லியில்தங்கியிருக்கும் கராத்தேவை அங்கு வைத்தே அமுக்கிப் பிடிக்க தனிப் படையை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications