குஷ்பு மீதான இன்னொரு வழக்கும் தள்ளுபடி!
பெரம்பலூர்:
நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இளம் பெண்களின் கற்பு குறித்து பேசிய குஷ்புவைத் தண்டிக்க வேண்டும் என்று கோரி 25க்கும் மேற்பட்ட வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பல வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றங்கள் குஷ்புவுக்கு சம்மன்அனுப்பியுள்ளன.
சில நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் பெரம்பலூர் மாவட்ட பாமகபொருளாளர் கமலா மற்றும் மகளிர் அணிச் செயலாளர் பரமேஸ்வரி ஆகிய இருவரும் பெரம்பலூர் நீதிமன்றத்தில் குஷ்புவுக்குஎதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹரிராஜன், குஷ்பு மீது வழக்கு தொடருவதற்கு தேவையான முகாந்திரம் மனுவில்குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
இதற்கிடையே சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் வருகிற 28ம் தேதி குஷ்பு ஆஜராக வேண்டும் என சம்மன்அனுப்பப்பட்டுள்ளது.
அம்பத்தூர் நீதிமன்றத்தில் கவுன்சிலர் லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரணீதரன்,வரும் 28ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் குஷ்பு நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.