சென்னையில் பெண்ணிடம் ரடிவுகள் அட்டகாசம்
சென்னை:
சென்னை கீழ்பாக்கத்தில் ரவுடிக் கும்பல்களின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் போலீஸ் கமிஷ்னரிடம் புகார்தந்துள்ளார்.
கீழ்பாக்கத்தில் லாக்மா நகர் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.இந் நிலையில் கடந்த வாரம் கடைக்குச் சென்ற சாராள் என்பவரை ரோமன், செல்லா ஆகிய இரு ரவுடிகள் வழி மறித்துள்ளனர்.கஞ்சா அடித்திருந்த அவர்கள் சாராளின் பாவாடையை பிடித்து இழுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரவுடிகளிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். ஆனால், பின்னாடியே ஓடி வந்தஅவர்கள் சாராளைக் கடத்தப் போவதாக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து சாராளின் தாயார் ஜி-5 செக்ரடேரியட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த காவல்நிலையத்தின் காக்கிகள் புகாரை வாங்கி வைத்துவிட்டு தங்களது மாமூல் வேலையில் பிஸியாக இருந்துள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகும் அந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்களுக்கு பாதுகாப்பு கோரிசாராளும் அவரது தாயாரும் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் நடராஜிடம் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications