எஸ்ஆர்பி வீட்டு கொள்ளை: ஆளுநரிடம் காங் மனு
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக காவல்துறை நடவடிக்கைஏதும் எடுக்காகது குறித்து ஆளுனர் பர்னாலாவிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மனு கொடுத்தார்.
தமிழக ஆளுனர் பர்னாலாவை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக் கட்சியினர் இன்று காலை சந்தித்துஇந்தக் கோரக்கை மனு கொடுத்தனர். இந்தக் குழுவில் எஸ்.ஆர்.பி, காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்தனர்.ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகமேலிடத்தின் உத்தரவின் பேரில் போலீஸாரே நடத்திய கொள்ளைச் சம்பவம் அது.
எஸ்ஆர்பி வீட்டில் சூறையாடல் நடந்து கடந்த 20 நாட்களாகியும் இதுவரை எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் இருப்பதுகண்டனத்துக்குரியது.
சூறையாடலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த நாங்கள் முடிவுசெய்தும் கூட அதை அனுமதிக்க காவல்துறை மறுத்துள்ளது.
இந்த சூறையாடல் சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனஆளுநருக்கு கோக்கை விடுத்துள்ளோம் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications