For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. உருவ பொம்மையை எரித்த மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்து போராட்டம்நடத்தினர்.

திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 1,600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குசென்னையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். மாணவர்களுக்கு இங்கு விடுதிவசதியில்லை.

எனவே சென்னையை சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை சட்டக் கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தியும், சென்னை சட்டக் கல்லூரியில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அனைத்து இடங்களையும்நிரப்பாத தமிழக அரசை கண்டித்தும் திருச்சி சட்டக் கல்லூயில் படிக்கும் சென்னையை சேர்ந்த சட்டக் கல்லூரிமாணவர்கள் இன்று முதல்வர் ஜெயலலிதா உருவப் பொம்மையை எரித்தனர்.

பின்னர் மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி சட்டக் கல்லூரிக்குஉடனடியாக முதல்வரையும், போதுமான பேராசியர்களையும் நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு தங்கும் விடுதிஏற்படுத்த வேண்டும் என்று அப்போது கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் நடந்து முடியும் வரை போலீசார் யாரும் வரவில்லை. ஜெயலலிதா உருவ பொம்மைகொளுத்தப்பட்ட பிறகு கே.கே. நகர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சில போலீஸ்காரர்கள் அங்கு வந்து என்னநடந்தது என்று விசாரித்தனர்.

இந்தப் போலீசாருக்கு விரைவில் அரசு ஆப்பு வைக்க வாய்ப்புள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X