அமைச்சரவையில் சேர மாட்டோம்: வைகோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அமைச்சரவையில் மதிமுக சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மீண்டும்திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது மதிமுகவை அமைச்சரவையில் சேருமாறுபிரதமர் மீண்டும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், அதை ஏற்க வைகோ மறுத்துவிட்டார்.இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய வைகோ, பிரதமரின் கையில் சமீபத்தில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அதற்காக அவரதுஉடல் நலம் விசாரிக்கவே அவரை சந்தித்தேன்.
மேலும், சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த சிறப்பித்ததற்காக நன்றியும்தெரிவித்தேன்.
இருவரும் பொதுவான அரசியல் நிலை குறித்தும் பேசினோம். ஆனால் மதிமுக அமைச்சரவையில் சேருவது குறித்து எதுவும்பேசவில்லை. எங்களது நிலையில் மிகத் தெளிவாக, உறுதியாக இருக்கிறோம். அதிலிருந்து மாறும் பேச்சுக்கே இடமில்லைஎன்றார் வைகோ.
தமிழக அரசியல் நிலவரம் தவிர்த்து இலங்கை விவகாரம் குறித்தும் வைகோ பேசியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications