For Daily Alerts
Just In
சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடுதிரை கம்ப்யூட்டர்
சென்னை:
சென்னை ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 6 தொடுதிரை கம்ப்யூட்டர்கள் அமைக்கப்படுகின்றன.
ரெயில் வருகை, புறப்பாடு, டிக்கட் முன்பதிவு இட வசதிகள் போன்ற நிலவரங்களை பயணிகள் அறிந்துகொள்வதற்கு வசதியாக சென்னை செட்டிரல் ரெயில் நிலையத்தில் 4 தொடுதிரை கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டுஇருந்தன.ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவை பழுதடைந்ததை தொடர்ந்து பயணிகள் பெரிய சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் புதிய தொடுதிரைகளை அமைக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
எனவே புதிதாக 4 தொடுதிரைகளை அமைத்து, ஏற்கனவே பழுதாகியுள்ள 4 தொடுதிரைகளில் 2 தொடுதிரைகள்சரிசெய்யப்பட்டும் அமைக்கப்பட உள்ளது.
இதனால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடுதிரை கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல் எழும்பூர் ரெயில் நிலையத்திலும் தொடுதிரைகள் கூடுதலாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்த தொடுதிரை கம்ப்யூட்டர்கள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என்று தென்னக ரெயில்வேஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
Story first published: Sunday, October 23, 2005, 5:30 [IST]