மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை விடுமுறைகள் ரத்து?
டெல்லி:
மத்திய அரசு பண்டிகை விடுமுறை நாட்களை ரத்து செய்து அமலாக்க புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஆண்டுக்கு 17 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதில் சுதந்திர தினம்,குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 3 நாட்களும் தேசிய விடுமுறை நாட்கள். மற்ற 14 நாட்களும் மதரீதியானபண்டிகை விடுமுறை நாட்கள்.இந்த 14 விடுமுறை நாட்களையும் ரத்து செய்ய மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு மொழி மற்றும் மதரீதியிலான விடுமுறைகள் வழங்குவது ரத்துசெய்யப்டும்.
அதற்குப் பதிலாக ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் உயர்த்தப்படுகிறது. இனிமேல் இந்தவிடுமுறை 7 நாட்களிலிலிருந்து 10 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் 14 பண்டிகை விடுமுறை நாட்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும்.ஊழியர்கள் தங்களுக்கு தேவையான பண்டிகை நாட்களில் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி எடுக்கும் விடுமுறை வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் ஊழியர்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படாது.
இந்த திட்டம் குறித்து மத்திய அமைச்சர் சபை செயலாளர் பி.கே. சதுர்வேதி தலைமையில் வருகிற 25ம் தேதிஆலோசனை நடைபெறுகிறது.
இது குறித்து பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களுக்கு கருத்து கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.