காவிரியில் வெள்ளம்: பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் வெளியேற்றம்
சேலம்:
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 97,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளதால் காவிக் கரையோரத்தில் உள்ள11மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைஇந்த ஆண்டில் 3வது முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.அணைக்கு விநாடிக்கு 97,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.08 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 43,304 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டுள்ளது.
அதிக அளவில் நீர் வந்து கொண்டிருப்பதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு இன்று பிற்பகலுக்குள் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைஎட்டும் என்பதால் முன்னெச்சக்கை நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.
சேலம் மாவட்டம் மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம்,மோகனூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications