For Daily Alerts
Just In
பில்லேடன் இறந்துவிட்டான்: பாகிஸ்தான் பத்திரிகை தகவல்
முல்தான்:
சர்வதேச தீவிரவாதி பில்லேடன் 4 மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டான் என்று பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் அல்-கொய்தாதீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது, அங்குதலிபான் ஆட்சியும் அகற்றப்பட்டது.ஆனால் சர்வதேச தீவிரவாதி பின்லேடனையும் தலிபான் தலைவர் முல்லா உமரையும் பிடிக்கமுடியவில்லை. 4ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் பின்லேடன் தலைக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் முல்தான் நகரில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை பின்லேடன் 4 மாதங்களுக்குமுன்பே இறந்து விட்டான் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கந்தகார் முகாமில் தங்கியுருந்த போது அவன் இறந்தான் என்றும் அவனது உடல்ஷாகா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
Comments
Story first published: Sunday, October 23, 2005, 5:30 [IST]