தமிழக காவல்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 20 காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவிலான காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மிக முக்கியமாற்றமாக மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த விஜயகுமார் மாற்றப்பட்டு திருநெல்வேலி சரகடிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இளம் பெண் ஜனனியை கஞ்சா வழக்கில் கைது செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்குவரவழைக்கப்பட்டு கடுமையாக கண்டிக்கப்பட்டவர் விஜயகுமார் என்பது நினைவிருக்கலாம்.
சர்ச்சையில் சிக்கிய விஜயகுமார் தற்போது மதுரையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை சரக டிஐஜியாக இருந்து வரும் கருணாசாகர், மதுரை மாநகர காவல்துறை ஆணையராக கூடுதல் பொறுப்புவகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட சென்னை காவல் இணை ஆணையராக இருந்து வந்த சைலேந்திரபாபு தென்சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதுவரை தென் சென்னை இணை ஆணையராக இருந்து வந்த உமாகணபதி சாஸ்திரி வட சென்னைக்குமாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி காவல்துறை ஆணையராக பிரதீப் பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி தென் சரக லஞ்ச ஒழிப்பு மற்றும்கண்காணிப்பு எஸ்.பியாக ஜெயபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரேசன், மேற்கு சரக லஞ்ச ஒழிப்பு மற்றும்கண்காணிப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் பல காவல்துறை அதிகாரிகள்மாற்றப்பட்டுள்ளனர்.
7 இணை காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications