சைதை கிட்டு சுகவீனம்: கருணாநிதி நலம் விசாரித்தார்
சென்னை:
திமுகவின் முன்னணிப் பிரமுகர்களில் முக்கியமானவரான சைதை கிட்டு உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
சைதை கிட்டு செயலில் சிட்டு என கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் சைதை கிட்டு. சென்னை சைதாப்பேட்டைத் தொகுதியில்திமுக சார்பில் நிரந்தரமாக போட்டியிடும் வேட்பாளராக திகழ்ந்தவர். தென் சென்னை மாவட்ட திமுக செயலாளராக பலஆண்டுகாலம் பொறுப்பு வகித்தவர். கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டவர்.சைதை கிட்டு சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகதகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கிட்டு அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அப்போது கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
ஆளே உருத் தெரியாமல் மாறியுள்ள கிட்டுவுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கருணாநிதிகேட்டறிந்தார். கருணாநிதியுடன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications