கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: பெங்களூர்-சென்னை ரயில்கள் ரத்து
சென்னை:
பலத்த மழையால் பெங்களூர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு பங்காருபேட்டை அருகே தடம்புரண்டது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் இரவு பெங்களூரிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு சென்றுக் கொண்டிருந்த இந்த ரயில்பங்காருப்பேட்டை அடுத்துள்ள வரதராஜபுரம் அருகே இரவு 1.30 மணிக்கு தடம் புரண்டது.
ரயிலின் மூன்று பெட்டிகள் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இதனால் பயணிகள் அலறினர். ரயில் டிரைவர்உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.
மாற்று இன்ஜின் பொறுத்தப்பட்டு நேற்று மதியம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மாற்று வழியில் இயக்கப்பட்டது.
பெங்களூர்-சென்னை ரயில்கள் ரத்து:
ரயில் தடம் புரண்டதால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டன.
பெங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே இயக்கப்படும்ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், பெங்களூர்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ்ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பங்காருப்பேட்டையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மண் அரிப்புக்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாகசென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. தண்டவாளங்கள் இன்னும் சரிசெய்யப்படாததால், இன்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் சென்னை-பெங்களூர் இரு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.
இதற்கிடையே சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மழை நீர் புகுந்து தண்டவாளங்கள் மண் அரிப்புக்குள்ளாகியுள்ளன.இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக சென்று கொண்டுள்ளன.
சென்னைக்கு வரும் மற்றும் சென்னையிலிருந்து கிளம்பும் ரயில்கள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்தே வந்து செல்கின்றன.இதனால் பயணிகள் பேசின் பிரிட்ஜ் நிலையம் சென்று ரயில்களைப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.