மழை, வெள்ளத்துக்கு இதுவரை 63 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழை, காவிரி வெள்ளம் ஆகியவற்றிற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 63 ஆகஉயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனர் சந்தானம் செய்தியாளர்களிடம்கூறுகையில்,காவிரி டெல்டாப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பெரும் பாதிப்பைஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காறணமாக இதுவரை 51 பேர் வரை உயிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மட்டும் 11 பேர் இறந்துள்ளனர் என்றார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் மேலும் 12 பேர் மழைக்குப் பலியாகிவிட்டனர். இதனால் இந்த கனமழைக்குப் பலியானவர்களின்எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காவிரிக் கரையோரம் உள்ள மாவட்டங்களில் இந்த உயிர்ப் பலிகள் நேர்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications