For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பட்டாசு கடையில் தீ: ஒருவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பாரிமுனையில் உள்ள பட்டாசுக் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் கருகி இறந்தார். 10 பேர்காயமடைந்தனர்.

தீபாவளியையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள பல்வேறு கடைகளில் பட்டாசு மொத்த விற்பனை தொடங்கியுள்ளது.சிவகாசியிலிருந்து நேரடியாக வரவழைக்கப்படும் பட்டாசுகள் இங்குள்ள பந்தர் தெரு மற்றும் வேறு சில தெருக்களில் உள்ளகடைகள் மூலம் சென்னை நகர வியாபாரிகளுக்கு சில்லறையாக விற்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பந்தர் தெருவில் உள்ள இரு கடைகளில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்தக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அந்தத் தெருவே தீயில் எரிவது போல காணப்பட்டது.

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் ஒருவர் கருகிஉயிரிழந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. தீவிபத்தையடுத்து கடைகளுக்கு மேலே இருந்த கட்டடங்களிலிருந்து 10 பேர்கீழே குதித்தபோது அவர்கள் காயமடைந்தனர்.

அந்தத் தெருவில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தீயணைப்புப்படையினரின் துரித நடவடிக்கையால் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X