குஷ்புவுக்கு பிடிவாரண்ட்: இடைக்காலத் தடை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Kushboo

தமிழக பெண்களின் கற்பு குறித்து பேசிய நடிகை குஷ்புவுக்கு திருச்சி நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் மீதுமதுரை உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது.

தமிழக பெண்களின் கற்பு குறித்து குஷ்பு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்துதமிழகம் முழுவதும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதே போல் திருச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை24ம் தேதி விசாரித்த நீதிமன்றம், நேற்று (செவ்வாய்கிழமை) குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

ஆனால் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவும், மழை காரணமாக ஆஜராகமுடியவில்லை என்றும் கோரி குஷ்புவின் வழக்கறிஞர் சரவணன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி மனுவை தள்ளுபடி செய்து, குஷ்புவுக்கு எதிராக ஜாமீனில்வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

நவம்பர் 15ம் தேதிக்குள் குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.இதனால் அவர் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்குகிடையே திருச்சி 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிறப்பித்த பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி குஷ்புசார்பில் அவரது வழக்கறிஞர் அசோகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். சொக்கலிங்கம் குஷ்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க 4வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ஆவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில், உதவி அரசு வழக்கறிஞரை நியமிக்கவும் நீதிபதிஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+