சாலை பணியாளர்கள் மொட்டை போட்டு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கோரி சென்னை சேப்பாக்கம் அரசுஅலுவலக வளாகத்தில் மொட்டை போட்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர்ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்தார். இதை எதிர்த்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி பல்வேறு கட்டங்களாக சாலைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந் நிலையில் இன்று காலை சேப்பாக்கம் அரசு அலுவலக வளாகத்தில் கூடிய அவர்கள் அங்கு மொட்டை போட்டு நூதனப்போராட்டம் நடத்தினர்.
50க்கும் அதிகமானோர் மொட்டை போட்டுக் கொண்டனர். தங்களை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும்என சாலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications