அருணா கொலை: எஸ்.ஏ. ராஜா மீண்டும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அதிபர்எஸ்.ஏ.ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தும், அவரை உடனடியாக மீண்டும் கைது செய்யவும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி எஸ்.ஏ.ராஜா. இவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், ராஜாவுக்கு வழங்கப்பட்டஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications