தொடர் மழை: தமிழகத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம்
சென்னை:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகளில் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் மூழ்கியுள்ளன. காவிரி கரையோரப் பகுதிகளானதிருச்சி, ஸ்ரீரங்கம், பள்ளிபாளையம், குமாரபாளையம், ஒருவந்தூர், ஈரோடு, பரமத்திவேலூர், பகுதிகள்வெள்ளத்தில் மூழ்கி, தீவுகளைப் போல காட்சியளிக்கின்றன.சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.அவற்றின் உடல்கள் ஆங்காங்கே கரை ஒதுங்கியிருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வெள்ள நீர் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் குடிநீர் முறையாகக் கிடைக்கவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளிலும், கலயாண மண்டபங்களிலும் அமைக்கப்பட்டுள்ளமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 5,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் உள்ளவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கென மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
வெள்ளம் காரணமாக வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க டீக்கடைகள் மற்றும்ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் நீரை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குடிநீரை காய்ச்சிகுடிக்குமாறும் பொதுமக்களுக்கு அந்தந்த பகுதி சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரியில் பன்னஅள்ளியில் உள்ள குமாரசெட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. சின்னாற்றின்வழியோரக் கிராமங்களிலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசின் மலேரியா ஆராய்ச்சி குழுவினர் தர்மபுரி மாவட்டத்துக்கு சென்று, ஆய்வுகளைதொடங்கியுள்ளனர். நோய் பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் மாத்திரைகளைவழங்கி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய பாறைகள்சாலைகளில் உருண்டு விழுந்தன. இதனால் பல மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதியில்தொலைபேசி இணைப்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications