மதுரையில் 1086 கண்மாய்கள் நிரம்பின
மதுரை:
மதுரை மாவட்டத்தில் 1086 கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் என்று எங்கு பார்த்தாலும் தண்ணீர்நிரம்பி வழிகிறது.மதுரை பெரியாறு-வைகை பாசன கோட்டத்தின் கீழ் 148 கண்மாய்களும், மழையை நம்பி மானாவாரி கண்மாய்கள் 47ம் ஆகமொத்தம் 195 கண்மாய்கள் உள்ளன.
இந்த கண்மாய்கள் மூலம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், திருமங்கலம் மற்றும் மதுரை மேற்கு ஆகிய பகுதிகளில்உள்ள 41,202 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தற்போது பெரியாறு வடிநில கோட்டத்தில் மழையால் 68 கண்மாய்களும், மானாவாரி கண்மாய்களில் 6ம் முழுமையாகநிரம்பியுள்ளன. மீதம் 36 கண்மாய்கள் பாதி நிரம்பியுள்ளன.
மேலூர் பெரியாறு பிரதான கால்வாய் கோட்டத்தில் பாசன கண்மாய்கள் 958ம் மானாவாரி கண்மாய்கள் மூலம் 49ம் ஆகமொத்தம் 1007 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி சில கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 1301 மொத்த கண்மாய்களில் 1086 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 63கண்மாய்கள் நிரம்பும் தருவாயிலும் மீதமுள்ள 152 கண்மாய்களில் மிக குறைந்த அளவு தண்ணீருமே காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications