கனமழை: சேலத்தில் வீடு இடிந்து 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சேலம்:


சேலத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் வீடு இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாயினர்.

வங்கங்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர் மழைபெய்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரிகள் நிரம்பிகால்வாய் வழியாக வழிந்து வரும் தண்ணீர் வீதிகளில் புகுந்து தேங்கி நிற்கிறது.

சேலம் எருமாபாளையத்தில் உள்ள பாத்திமா நகரில் மழை நீர் கடந்த சில நாட்களாக தேங்கி நின்று வருகிறது.இங்கு வசித்து வரும் மாதேஸ்வரி (வயது 53) என்பவரின் வீட்டை சுற்றி தேங்கி நின்ற மழை நீர் காரணமாக,சுவரில் ஈரப்பதம் ஏறி பலமின்றி இருந்தது.

இந்த நிலையில் மாதேஸ்வரி அவரது மகன் தீனதயாளன் (வயது 22), பேரன் மணிகண்டன், 4 மாத பெண் குழந்தைஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.


அப்போது திடீரென அவரது வீட்டின் உட்புற சுவர் இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேரும்பலத்த காயத்துடன் இடிபாடுகளில் சிக்கி உயிரழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய 2 குழந்தைகள் மற்றும் மாதேஸ்வரியின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. ஆனால் தீனதயாளனின் உடலை மீட்பதற்கு சிரமம் ஏற்பட்டது. பிறகு துணை கமிஷனர் பாஸ்கரன் மற்றும்போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு அவரது உடலை மீட்டனர்.

இதுவரை சேலத்தில் மழைக்கு 8 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+